மரவள்ளிக்கிழங்கு பொரியல்
பெரும்பாலும் எல்லாரும் இந்த கிழங்கை வேகவைத்து தான் சாப்பிடுவாங்க . சில பேர் சாப்பிடவே மாட்டாங்க. சில பேருக்கு எப்படி பயன்படுத்தறதுனு கூட தெரியாது. இந்த கிழங்கை வேகவைத்தும் சாப்பிடலாம் , தோசை மாதிரியும் செய்யலாம் , பொரியலும் செய்யலாம் . இப்ப பொரியல் எப்படி செய்யறதுனு பாக்கலாம் .
தேவையான பொருட்கள்:
மரவள்ளிக்கிழங்கு - 3
வெங்காயம் - 2 சிறியது
தக்காளி - 2 சிறியது
மஞ்சள் தூள் - 1/4 teaspoon
மிளகாய் தூள் - 1tablespoon
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
தக்காளி - 2 சிறியது
மஞ்சள் தூள் - 1/4 teaspoon
மிளகாய் தூள் - 1tablespoon
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 2 tablespoon
கடுகு - 1 teaspoon
கறிவேப்பிலை , கொத்தமல்லி
செய்முறை :
முதலில் கிழங்கை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் அதன் மீது உள்ள தோலை நீக்கவும் . சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் . வெங்காயம் , தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும் . வாணலில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகை போட்டு தாளிக்கவும் . நன்றாக வதங்கிய பின் மஞ்சள் தூள் , மிளகாய் தூள் போடவும் . பின்னர் கிழங்கை போட்டு, உப்பு சேர்த்து கிளறவும் .கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு குறைந்த அணலில் வைத்து கிளறவும் . சுவையான கிழங்கு பொரியல் ரெடி.
Comments
Post a Comment